

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையில் உள்ள குளறுபடிகள் இருப்பதாக தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தி.மு.க. சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.