மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக - ராகுல் குற்றச்சாட்டு

மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி தூண்டுவதாக பாஜக மீது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #rahulgandhi #modi
மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக - ராகுல் குற்றச்சாட்டு
Published on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். இன்று பிலாஸ்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடிய அவர், தொண்டர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.

‘எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி பாஜக செய்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com