கடலூர் ராமாபுரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் பத்மநாபனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது போலீசார், தனஞ்செழியன், கவுதம், வேல்முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் ராமாபுரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அப்போது வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் பத்மநாபனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த பத்மநாபன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், தனஞ்செழியன், கவுதம், வேல்முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com