search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் அரை நிர்வாண நிலையில் கிடந்தார் பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பெண் நகைக்காக கொல்லப்பட்டாரா? - தனிப்படையினர் தீவிர விசாரணை
    X

    சுயம்புகனி

    உடன்குடியில் அரை நிர்வாண நிலையில் கிடந்தார் பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பெண் நகைக்காக கொல்லப்பட்டாரா? - தனிப்படையினர் தீவிர விசாரணை

    • தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மனைவி சுயம்புகனி (வயது55)
    • நேற்று சுயம்புகனி வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மனைவி சுயம்புகனி (வயது55).

    அரை நிர்வாண நிலையில்

    நேற்று சுயம்புகனி வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு ஆடைகள் களையப்பட்டு அரை நிர்வாண நிலையில் சுயம்புகனி இறந்த நிலையில் கிடந்தார்.

    எஸ்.பி. விசாரணை

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையா?

    அரை நிர்வாண நிலையில் சுயம்பு கனி இறந்து கிடப்பதால் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? போலீ சார் சந்தேகிக்கின்றனர்.

    இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்பபிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனிப்படை

    இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர்.

    மேலும் சுயம்பு கனியின் உறவினர்கள், அவரது கணவர், நண்பர்கள் ஆகியோரிடம் விடிய, விடிய விசாரனை நடத்தி நடத்தினர். தொடர்ந்து தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×