search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக பட்ஜெட்: அனைத்து துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது- எம்.பி. அறிக்கை
    X

    தமிழக பட்ஜெட்: அனைத்து துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது- எம்.பி. அறிக்கை

    • தமிழக பட்ஜெட்டில் அனைத்து துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழக பட்ஜெட் குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொலைநோக்கு பார்வை யோடு தயாரிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சமூக நீதிக்கான பட்ஜெட்டாகும்.

    குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியாண்டில் இருந்து மாதம் ரூ.1000 உரிமைத் தொகை யாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

    அதேப்போல விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் நகரில் இருந்து மதுரை ஒத்தக்கடை வரை மெட்ரோ ெரயில் திட்டம் ரூ.8ஆயிரத்து 800 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பது அனைத்து மக்களையும் மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.

    மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தேன். என் குரலுக்கு மதிப்பளித்து மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

    பள்ளிக்கூடம் முதல் (காலை உணவு) ஏரி, குளங்கள் சீரமைப்பு, பன்னோக்கு, மருத்துவ மனைகள், போக்குவரத்து 14 ஆயிரத்து 500 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் திட்டங்கள் என அனைத்து துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது தொலை நோக்குப் பார்வையான பட்ஜெட் என்பதற்கும், சமூக நீதிக்கான பட்ஜெட் என்பதற்கும் எடுத்துக் காட்டுகள் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×