search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் அணிவகுப்பு
    X

    போலீஸ் அணிவகுப்பு

    • பொதுமக்கள் நட்புறவை பேணும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
    • இதில் காவலர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    பொதுமக்கள்-காவல்துறையினரிடையே நட்புறவை மேம்படுத்தவும், போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நகர் வட்ட ஆய்வாளர் சங்கர் கண்ணன் வத்தராப் வட்ட ஆய்வாளர் ஆறுமுகம், கிருஷ்ணன் கோவில் வட்ட ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் இருந்து மதுரை ரோடு, சின்னக்கடை பஜார், பஸ் நிலையம், மார்க்கெட் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு வழியாக மங்காபுரம் விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு சென்றது. இதில் காவலர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×