search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள்மோதல்; ஒருவர் பலி
    X

    மோட்டார் சைக்கிள்கள்மோதல்; ஒருவர் பலி

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி ஒருவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு கோட்டையூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). இவர் அழகாபுரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த மூர்த்தி மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×