மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரான நெல்லை கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சவுந்தர மகாதேவன் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரான நெல்லை கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சவுந்தர மகாதேவன் பேசினார்.
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் சார்பில்"சிகரம் தொடலாம்" என்ற தலைப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், 48 மாணவர்களைக் கொண்டு உருவான கல்லூரி இன்று 3 ஆயிரம் மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் வாழ்வில் 3 ஆண்டுகளை தியாகம் செய்தால் 33 ஆண்டுகள் சிறப்பாக அமையும் என்றார்.

முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சவுந்தர மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா வரவேற்றார். தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அமுதா அறிமுக உரையாற்றினார். துணை முதல்வர்கள் பாலமுருகன்,முத்துலட்சுமி ஆகியோரும் பேசினர்.

வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் நளாயினி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com