search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளீஸ்வரி கல்லூரியில் சிலம்பம் போட்டி
    X

    காளீஸ்வரி கல்லூரியில் சிலம்பம் போட்டி

    • காளீஸ்வரி கல்லூரியில் சிலம்பம் போட்டி நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதனை உலக சிலம்பம் விளையாட்டு சங்கமும், சிவகாசி ரோட்டரி கிளப்பும் இணைந்து நடத்தின. விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் தனி மற்றும் குழு போட்டி களாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.

    மேலும் இப்போட்டியில் காளீஸ்வரி கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு ஒற்றை கம்பு, அரை கம்பு, அலங்கார சிலம்பம் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை கல்லூரி செயலர் செல்வராசன். முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்து லட்சுமி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×