search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
    X

    வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

    வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன் (வயது 31). இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் சிறையில் இருந்தவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த அன்பழகன் கனகராஜன் மனைவியை சந்திக்க முயற்சித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது அத்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகனை வீடு புகுந்து கனகராஜ் மற்றும் அவரது மகன் கணேஷ் ராஜ் ஆகியோர் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்திருந்தனர். இதை தொடர்ந்து கனகராஜின் மகன் கணேஷ் ராஜையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×