search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் அதிரடி கைது
    X

    29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் அதிரடி கைது

    • கள்ள நோட்டு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடந்த 29 ஆண்டுகளாக கர்நாடகா போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    விருதுநகர்

    கடந்த 1994-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பசவேஸ்வர் சவுக் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி(வயது51), சிவகாசியை சேர்ந்த பாண்டியன்(60), விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்ற மகேந்திரன்(61) ஆகிய 3 பேரை நிப்பானி போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 3 பேரும் அங்குள்ள சிக்கோடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதன்பின் 3பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    அப்போது வழக்கு விசாரணைக்கு வரும்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என மாஜிஸ்தி ரேட்டு உத்தரவிட்டிருந்தார். ஆனால் 3 பேரும் கோர்ட்டின் விதிகளை பின்பற்றாமல் தலைமறை வானார்கள். கடந்த 29 ஆண்டுகளாக கர்நாடகா போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 3 பேரும் தங்கள் சொந்த மாவட்டங் களில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கர்நா டகா போலீசார் இதுகுறித்து தமிழக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    தென் மண்டல ஐ.ஜி.அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் சிவகாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபகுமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி விருதுநகரில் தலைமறைவாக இருந்த ரவி, பாண்டியன், மூவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×