

நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஸ்ரீமத்பரசமய கோளரிநாத ஆதீன கமிட்டி தலைவர் அனந்த நாராயணன் ஆச்சாரி, செயலாளர் வக்கீல் ஆறுமுகராஜ், பொருளாளர் அசோக்ராஜ், அறங்காவலர்கள் ஆறுமுகநயினார், சக்திவேல், சுப்பிரமணியசாமி, கந்தன், கண்ணன், வக்கீல் முருகமுரளிதரன், நெல்லை குமார், அர்ச்சகர் பாலாஜி சர்மா, வக்கீல் பரமசிவகுமார், சங்கரன் ஆச்சாரி, வேலு ஆச்சாரி, ஆறுமுக ஆச்சாரி மற்றும் அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் இளைஞர் அணி நிர்வாகிகள் நரசிம்மன், சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விசாகத்தை யொட்டி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.