search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்-முன்னாள் மத்திய மந்திரி பங்கேற்பு
    X

    திருச்சியில் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்-முன்னாள் மத்திய மந்திரி பங்கேற்பு

    • தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநகர் மாவட்டம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
    • போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

    திருச்சி:

    தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5-ந்தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    உண்ணா விரதத்தில் நிர்வாகிகள் மாநில இணைபொருளாளர் சிவ.சுப்பிரமணியம், கோட்டப் பொறுப்பாளர் இல. கண்ணன், தங்க.ராஜைய்யன், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் கௌதம் நாகராஜன், பாலன், மாநில செயற்குழு உறுப்பினர் வரகனேரி பார்த்திபன், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் எம்.பி.முரளிதரன்,

    வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுவேந்திரன், மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வரன், லீமா சிவகுமார், ஜெயகர்ணா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் காளீஸ்வரன், தண்டபாணி, ஒண்டிமுத்து, மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் இந்திரன், துணைத்தலைவர் சிவகுமார், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், இைளஞரணி மாநிலச் செயலாளர் என்ஜினியர் ஸ்ரீராம்,

    பொருளாளர் செல்வதுரை, மாவட்ட செயலாளர் நாகேந்திரன், எம்பயர் கணேஷ், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிக்குமார், மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார்,

    பொதுச்செயலாளர்கள் வீரமணி, குண்டு கோபால், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேகா, விவசாய அணி மாவட்ட தலைவர் சக்திவேல், தரகு மேலாண்மை மாநில செயலாளர் சிட்டிபாபு, மண்டலச் செயலாளர்கள் புருஷோத்தமன், மல்லி செல்வம், பிரசாத், பழனிக்குமார், அருண், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×