கஞ்சா விற்பனை செய்யமாட்டேன் - கைதான 27 பேர் உறுதிமொழி ஏற்பு

கஞ்சா உபயோகபடுத்த மாட்டேன்.இந்திய தண்டனை சட்டம் 109ன் கீழ் கைது செய்யபட்டவர்கள் உறுதிமொழி.
கைதானவர்கள் உறுதிமொழி ஏற்ற காட்சி.
கைதானவர்கள் உறுதிமொழி ஏற்ற காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, மற்றும் உபயோகித்து வந்து,போலீசாரால் இந்திய தண்டனை சட்டம் 109ன் கீழ் கைது செய்யபட்ட 27 பேர் மனம் திருந்தி வாழவும், இனி வரும் நாட்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட மாட்டேன்,கஞ்சா உபயோகபடுத்த மாட்டேன்என்கிற உறுதி மொழியை பல்லடம் வட்டாட்சியரும், வருவாய் துறை வட்ட நடுவருமான நந்தகோபால் முன்னிலையில் ஏற்றனர்.

அவர்கள் ஒரு ஆண்டு பிணையத்தால் (ஜாமீன்) விடுவிக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com