search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றியடையலாம் -   சப்-கலெக்டர் பேச்சு
    X

    சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய காட்சி.

    செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றியடையலாம் - சப்-கலெக்டர் பேச்சு

    • மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும் போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பேரிடா் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் பங்கு சிறப்பாக இருக்க வேண்டும். மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும்போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள். அதே வேளையில், மாணவா்கள் சேவை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும்போது மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்றாா்.இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×