search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் அருகே அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
    X
    கோப்புபடம்.

    காங்கயம் அருகே அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

    • காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி சாம்பவலசு பகுதியில் திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கி பேசினார்.ஒன்றிய துணை செயலாளர் ஏ.என்.திருச்செந்தில், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

    விழாவில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.விழாவில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் முத்துவெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகவேல் என்ற ஏ.எஸ்.ராமலிங்கம், முத்தூர் பேரூர் செயலாளர் ஜி.முத்துக்குமார், காங்கயம் தொகுதிக்குப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×