காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியை செய்து காண்பித்தனர்.பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி.  
விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி.  
Published on

காங்கயம்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீ விபத்து இல்லாத தீபாவளி மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் காங்கயம் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியை செய்து காண்பித்தனர்.

இதில் பட்டாசுகள் திறந்தவெளியில் கூரை வீடுகள் இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். கைக்குழந்தைகள் இருக்கும் வீடுகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. எண்ணெய் சேமிக்கும் குடோன்கள், தேங்காய் பருப்பு குடோன்கள், பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com