தேசிய பயிர் சாகுபடி- தொழில்நுட்ப பயிற்சி

திருப்பூர் மாநகரம் இடுவாயில் பயிா் சாகுபடி, ராபி பருவத்துக்கான முதற்கட்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. வட்டார வேளாண்மை அலுவலா் சுகன்யா, அட்மா திட்ட உதவி வேளாண்மை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் , ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்து பேசினா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகரம் இடுவாயில், தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் திட்டத்தின் கீழ் பயிா் சாகுபடி, ராபி பருவத்துக்கான முதற்கட்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இதில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகா் அரசப்பன், வட்டார உதவி வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகி, வேளாண் விற்பனை-வணிக துறை வேளாண்மை அலுவலா் ரம்யா, வட்டார வேளாண்மை அலுவலா் சுகன்யா, அட்மா திட்ட உதவி வேளாண்மை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானியங்கள், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்து பேசினா். இதில் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com