search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் சூறாவளி காற்றுடன் கன மழை
    X

    ரோட்டில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததை படத்தில் காணலாம்.

    அவினாசியில் சூறாவளி காற்றுடன் கன மழை

    • அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது.
    • நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

    அவினாசி :

    கடந்த மாதம் 29 ந்தேதி உடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது. பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் பொதுமக்களை வாட்டி எடுத்தது.

    கடந்த 1 ந்தேதி பள்ளிகள் செயல்பட இருந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காரணமாகபள்ளிகள் செயல்படும் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை அவினாசி பகுதியில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. இதையடுத்து கருமேகங்கள் சூழ்ந்தது. நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் மழை நீர் குட்டை போல் தேங்கி நின்றது. சில இடங்களில் ரோட்டில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×