search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமூர்த்திமலை பகுதியில் தென்னை , பயிர்களை சேதப்படுத்திய யானைகள் - விவசாயிகள் கவலை
    X

    கோப்புபடம்.

    திருமூர்த்திமலை பகுதியில் தென்னை , பயிர்களை சேதப்படுத்திய யானைகள் - விவசாயிகள் கவலை

    • தென்னை மரங்களை சேதப்படுத்தி குருத்துகளை உண்டுள்ளன.
    • யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்திற்குள் விரட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன வில ங்குகள் நீர், உணவு தேடி மலையடிவார பகுதி கிராம ங்களுக்கும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.நேற்று முன்தினம் அதிகாலை, குட்டியுடன் கூடிய, யானை க்கூட்டம் திருமூர்த்தி மலை, கன்னிமார் ஓடை வனப்பகுதி வழியாக திருமூர்த்தி நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

    வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் 250 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்ப ட்டிருந்த கம்பி வேலி, 50க்கும் மேற்பட்ட வேலி கற்களை உடைத்து, உள்ளே நுழைந்த யானைக்கூட்டம் தென்னை மரங்களை சேதப்படுத்தி குருத்துகளை உண்டுள்ளன. தொடர்ந்து உடுமலை - திருமூர்த்திமலை ரோட்டை கடந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், பயிர்கள் மற்றும் குழாய், மோட்டார், போர்வெல் உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை சேதப்படு த்தியுள்ளன.இது குறித்து தகவல் கிடைத்ததும், உடு மலை வனத்துறையினர் ஆய்வு செய்ததோடு, யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்திற்குள் விரட்ட பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகை யில், பெரிய தந்தங்களுடன் கூடிய ஆண் யானை, சில மாதங்களே ஆன குட்டியுடன் கூடிய பெண் யானை கொண்ட கூட்டம், விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.பல ஆண்டுகளுக்கு பின் தற்போது திருமூர்த்திமலை கோவில், நீச்சல் குளம், ஆய்வு மாளிகை பகுதிகளில் யானை கூட்டம் வந்துள்ளன. குட்டியுடன் உள்ளதால் அது பெரிதாகும் வரை அவற்றை விரட்ட முடியாது.விவசாய பயிர்கள், கட்டமை ப்புகள் சேதம டைவதோடு உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×