search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்ச் மாத இறுதிக்குள்  குடிநீர் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் - கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    மார்ச் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் - கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் அறிவிப்பு

    • குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • குடிநீர் வரி ரசீது நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் இரண்டையும் கொடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் தங்களின் குடிநீர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் காந்திராஜ் கூறுகையில் "கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் நடப்பு ஆண்டு குடிநீர் வரி ரசீது நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் இரண்டையும் கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    எனவே குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிர்க்க இந்த மாத (மார்ச்) இறுதிக்குள் பொதுமக்கள் கொடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×