

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்து 3-வது அலை காரண மாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது.
ஒரு நாள் பாதிப்பு 800-ஐ கடந்து அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் 84 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6-ந்தேதி 73 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அசுரவேகத்தில் உயரத் தொடங்கியது.
இந்நிலையில் சுமார் 25 நாட்களுக்கு பிறகு இன்று பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழாக வந்துள்ளது.
இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் மாநகர பகுதியில் 31 பேருக்கும், ராதாபுரத்தில் 14 பேருக்கும், வள்ளியூரில் 18 பேருக்கும், அம்பையில் 11 பேருக்கும், பாளையில் 4 பேருக்கும், சேரன்மகாதேவியில் 3 பேருக்கும், களக்காட்டில் 2 பேருக்கும், மானூரில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட் டுள்ளது.
மாவட்டத்தை பொறுத்தவரை ராதாபுரம், வள்ளியூர், அம்பை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. பாப்பாக்குடியில் யாருக்கும் இன்று தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
மாநகர பகுதியைத் தொடர்ந்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.