தொடர் மழை: தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது.அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தொடர் மழை: தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Published on

வானிலை ஆய்வு மையம் அதிகனமழைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது/ Tirunelveli Tenkasi district Schools tomorrow Leave for Heavy rains

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில் இன்னும் பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இன்று காலை முதல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொடரந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com