தி.மு.க. சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டன
தி.மு.க. சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
Published on

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் கிரிவலப்பாதையில் 4 இடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் மையம் அமைக்கப்பட்டிருந்தது.

கிரிலப்பாதை கருணாநிதி சிலை அருகில், அருணாச லேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தூய்மை அருணை அலுவலகம், வேட்டவலம் சாலை மற்றும் காந்தி சிலை சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் பக்தர்கள், பொதுமக்களுக்கு உணவு வழங்கு வதை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

இதில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், தொ.மு.ச.பேரவை செயலாளர் சௌந்தரராசன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், விஜி (எ) விஜயராஜ், சர்தார், டிஎம் கதிரவன், நகர மன்ற துணைத்தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததாரர் துரைவெங்கட், மாவட்ட அணி நிர்வாகிகள் முரளி, சுப்பிரமணி, கிரிக்கெட்ரவி, வேங்கிக்கால் பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com