search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

    • மத்திய அரசு பொய் வழக்கு போட்டதை கண்டித்து தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில்,மத்திய அரசை கண்டித்து தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு போட்டதை கண்டித்து பல்லடம் நகர,வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில்,தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார் வரவேற்றார். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் செயல் தலைவர் மணிராஜ், ருத்ரமூர்த்தி,செந்தில்குமார்,சுந்தரி முருகேசன், ராமச்சந்திரன்,ஜேம்ஸ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×