search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
    X

    தஞ்சை கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

    தஞ்சை கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

    • தமிழர்களாக பிறந்த நாம் பண்பாடுகளை மறந்து விடக்கூடாது.
    • மாணவ-மாணவிகள் ஆசிரியர் தின கவிதை மற்றும் உரைநிகழ்த்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருதுபாண்டி யர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், துணை முதல்வர் தங்கராஜ் மற்றும் புலத்தலைவர் ஆராய்ச்சி அர்சுனன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு விருந்தி னராக கடலூர் மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் (ஓய்வு) அன்புச்செல்வன் கலந்து கொண்டு பேசுகை யில்:-

    தமிழர்களாக பிறந்த நாம் பண்பாடுகளை மறந்து விடக்கூடாது, என்றும் நல்ல வாழ்வியல் சூழலையும், முன்னேற்றத்தையும் தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்றார். முன்னதாக இளநிலை 2-ம் ஆண்டு உயிர் தொழில் நுட்பவியல் மாணவி செல்வரஞ்சனி அனைவ ரையும் வரவேற்றார். முடிவில் கல்வியியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி ஸ்ரீமதி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் உஷா தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, மாணவ-மாணவிகள் ஆசிரியர் தின கவிதை மற்றும் உரைநிகழ்த்தினர். இதில் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பா டுகளை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×