search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை மாணவிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி
    X

    தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை மாணவிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

    • முன்னணி நிறுவ னங்களில் பணிபுரியும் பயிற்சியா ளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • 4.0 தர தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் " நமது தொழிற்ப யிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதில் தொழிற்பயிற்சி பள்ளியில் மாணவிகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் முன்னணி நிறுவ னங்களில் பணிபுரியும் பயிற்சியா ளர்களை கொண்டு பயிற்சி அளிக்க ப்படுகிறது.

    நவீன தொழில் நுட்பத்தில் ஆய்வகங்கள், பணிமனைகள் மற்றும் கண்காட்சி அமைக்க ப்பட்டுள்ளது.

    இதனை மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளிக்கலாம்.

    மேலும் 4.0 தர தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சு ப்போட்டி, கவிதைபோட்டி, ஓவியப்போட்டி போன்றவை நடைபெறுகிறது.

    புதிதாக சேர்ந்துள்ள மாணவிகளின் சகோதரிகள் மற்றும் பெண் உறவினர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×