சென்னை விமான நிலையத்தில் தொழிலாளி மர்ம மரணம்

சென்னை விமான நிலையத்தில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

ஆலந்தூர்:

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய அத்தாரிட்டி கேண்டியன் உள்ளது. அதன் அருகே நேற்று இரவு, வாயில் நுரை தள்ளியபடி சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதையடுத்து அங்கு பணியிலிருந்த விமான நிலைய ஊழியர்கள், சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விமான நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ரமேஷ்(40) என்பதும், சென்னை விமான நிலையத்தில் டிராலிகளை தள்ளும் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இவருடைய உடலில் எந்த காயமும் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதேபோல் சென்னை விமான நிலையம் கார் பார்க்கிங் அருகே இந்த மாதம் கடந்த 7-ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடலில் காயங்களோடு இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com