search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை வண்ணார்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினர்- விவசாயிகள் மறியல் போராட்டம்: 700 பேர் கைது
    X

    நெல்லை வண்ணார்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினர்- விவசாயிகள் மறியல் போராட்டம்: 700 பேர் கைது

    • அனைத்து தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லையில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும், அனைத்திந்திய கிராமப்புற விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தர்மன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 ஊதியமாக வழங்க வேண்டும் என்று கூறியும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் பச்சை நிற துண்டு தோளில் போட்டபடி கொக்கிரக்குளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்கள் கழுத்தில் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அடங்கிய தொகுப்பை மாலையாக கட்டி அணிந்திருந்தனர். மேலும் கையில் மோடி என்ற வாசகம் அடங்கிய தடியங்காயை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து கையில் வைத்திருந்த தடியங்காயை சாலையில் போட்டு உடைத்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    Next Story
    ×