திட்டக்குடி பகுதியில் 8 கோயில்களில் திருடிய கொள்ளையன் கைது

திட்டக்குடி பகுதியில் 8 கோயில்களில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செங்கமேடு,வி. சித்தூர், மேல் ஆதனூர், கல்லூர் ,ஆவட்டி, வாகையூர், ஆ.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கோயில் உண்டியல் பணம் திருடு போனது. அதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று ஆவினங்குடி அடுத்த குடிக்காடு மாரியம்மன் கோயில் அருகே நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் பெண்ணாடம் சோழ நகரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சூரியமூர்த்தி (வயது 26) என தெரியவந்தது. இவர் கோயில்உண்டியல் திருட்டு தொடர்புடையவர் என தெரிய வந்தது.

திருப்பூரில் கூலி வேலை செய்து வந்த சூரிய மூர்த்தி பொங்கல் விழா விற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் . சரிவர வேலை கிடைக்கததால் செலவுக்கு பணம் இல்லாததால் 8 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடி உள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சூரியமூர்த்தியிடம் இருந்து ரூ. 7 ஆயிரம் பணத்தை கைப்பற்றிசிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com