

சென்னை:
வடசென்னை கிழக்கு மாவட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியத்தில் உள்ள விளாங்காடுப்பாக்கம் ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்தினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் ஏற்பாட்டில் நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் புழல் பெ.சரவணன் தலைமையில் நடந்த இந்த விழாவில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.
ஒன்றிய தலைவர் செல்வ மணி, துணைத் தலைவர் சாந்தி பாஸ்கரன், தங்கராஜன், காமராஜ், மல்லி ராஜா, பரிமளச் செல்வம், எழிலன், கபிலன், அருண், ராமு, திருநாவுக்கரசு, அப்போஸ், டில்லி பாபு, கோவிந்தராஜ், சதிஷ், நாகராஜ், வெங்கடேசன், அஜித்குமார், ராஜேஷ், சீனிவாசன், சீனு, இளைஞர் அணி தனுஷ் சரவணன், ரோகேஷ், சரவணன், செல்வகுமார், விமல், பிரேம்குமார், வார்டு உறுப்பினர் சத்யசீலன், ரதி சீனிவாசன், நிலவழகி இனியன், அருணாதேவி, சீனு, ஆனந்தி நாகராஜன், தர்மிரவி, நாம தேவன், அசோக், அப்பன் ராஜ், மலர் வேந்தன், வேல் குமார், சிவராம், கலையரசன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.