search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி அருகே  மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தல்- 5 பேர் கைது
    X

    திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தல்- 5 பேர் கைது

    • மோட்டார் சைக்கிளில் பெரிய மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    திருத்தணி:

    திருத்தணி அருகே அம்மனேரி பகுதியில் ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெரிய மூட்டைகளுடன் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஜெயவேலு, திருத்தணி அடுத்த பீரகுப்பம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார், பிரகாசம், பாணாவரம் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகியோரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×