search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்மாயில் சிறுவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். இரங்கல்
    X

    கண்மாயில் சிறுவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். இரங்கல்

    • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கண்மாயில் சிறுவர்கள் உயிரிழந்தனர்.
    • இச்சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, தென்கரை பேரூராட்சி, டி.கைலாசபட்டி பாப்பயம்பட்டி கண்மாயில் குளித்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மரணமடைந்த பன்னீர்செல்வம் மற்றும் சிறுவர்களான மணிமாறன், சபரிவாசன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×