search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி ரெயில்வே நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து பஸ்சில் அழைத்து சென்று அதே பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ரெயிலை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×