என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் டையிங் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது
- போலீசார் 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- விசாரணை நடத்தி 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 44). இவர் வீரபாண்டி பிரிவில் உள்ள நல்லாத்துதோட்டம் பகுதியில் வாஷிங் நிறுவனம் (டையிங்) வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருடைய நிறுவனத்திற்குள் 4 பேர் சென்றுள்ளனர். அவர்கள் செல்லமுத்துவிடம் தங்களை பொதுப்பணித்துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் இருந்து சாயகழிவு நீரை சாக்கடையில் திறந்து விடுவதாக புகார்கள் வந்துள்ளது , உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த செல்லமுத்து அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சிவசாமி (55), ஈரோட்டை சேர்ந்த பழனியப்பன் (51), முத்துவேல் (50), சண்முகசுந்தரம் (63) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்