திருவண்ணாமலை மகா தீப மலையில் புவியியல் வல்லுநர் குழு ஆய்வு

மகா தீப மலையில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் மலையேர அனுமதிக் வேண்டாம் என வனத்துனையினர் வேண்டுக்கோள் விடுத்தனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.
திருவண்ணாமலை மகா தீப மலையில் புவியியல் வல்லுநர் குழு ஆய்வு
Published on

வேங்கிக்கால்:

திருவண்ணாமலையில் ஃபெஞ்ஜல் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவு ஏற்பட்டதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . தற்போது மகா தீப மலையில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் மலையேர அனுமதிக் வேண்டாம் என வனத்துனையினர் வேண்டுக்கோள் விடுத்தனர். இதையொட்டி திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்கு பக்தர்களை மலைக்கு அனுமதிப்பது குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.

இதையடுத்து திருவண்ணாமலை மகா தீப மலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பிரேமலதா உட்பட 8 பேர் அடங்கிய புவியியல் வல்லுனர் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com