search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே  மின் கசிவால் கரும்பு தோட்டம் எரிந்து  சேதம்
    X
    தீ விபத்தினால் சேதமடைந்த கரும்பு  தோட்டத்தை படத்தில் காணலாம்.

    திருவெண்ணைநல்லூர் அருகே மின் கசிவால் கரும்பு தோட்டம் எரிந்து சேதம்

    • துரை அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.
    • 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. விவசாயி, இவர் அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார். நேற்று மாலை மின் கசிவு காரணமாக இவரது கரும்பு தோட்டம், திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது. மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×