என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சீர்காழியில், குறுவை தொகுப்பு திட்டம் குறித்த ஆய்வு கூட்டம்
- பயிர் நெருக்கமாக இருப்பதால் சரியாக தூர் கட்டுவதில்லை.
- கருவி மூலம் விதைப்பு செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் குருவை தொகுப்பு திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை ஆய்வு செய்தார் குருவை தொகுப்பு திட்டம் அனைத்து விவசாயிகளையும் சென்றடை வதற்கான அறிவுரைகளை வழங்கினார்.
அதன்பிறகு புங்கனூர் கிராமத்தில் செல்வராஜ் என்ற விவசாயின் வயலில் விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயலினை ஆய்வு மேற்கொண்டார்கள் அப்போது விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயலில் ஏக்கருக்கு எட்டு கிலோ விதை அளவு போதுமானது மேலும் ஒரே சீரான இடைவெளியில் நெல் பயிர் உள்ளது பயிருக்குப் பயிர் போதுமான இடைவெளி இருப்பதனால் நன்கு தூர் பிடித்துள்ளது. சாதாரண முறையில் விதைப்பு செய்வதால் விதை அளவு அதிகம் தேவைப்படுவதுடன் பயிர் நெருக்கமாக இருப்பதினால் சரியாக தூர் கட்டுவதில்லை
எனவே அனைத்து விவசாயிகளும் விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன். விதைப்பு கருவி 50 சதவீத மானிய விலையில் வேளாண்மை துறையில் உள்ளது எனவே தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவல ர்களை தொடர்பு கொண்டு 50 சத மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார் ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சீர்காழி ராஜராஜன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்