search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதி திராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    ஆதி திராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மேலும் விவரங்களுக்கு விடுதி காப்பாளா்களை அணுகி விவரம் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான 40 விடுதிகள் உள்ளன. அதில் பள்ளி மாணவா்களுக்கு 22 விடுதிகள், மாணவிகளுக்கு 13 விடுதிகள் செயல்படுகின்றன.

    கல்லூரி மாணவிகளுக்கு 2,மாணவா்களுக்கு 3 என விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டம், பட்டமேற்படிப்பு வரையில் பயில்வோரும் சேரலாம்.

    10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி நூல்கள் இலவசமாக வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிப்போரது வீட்டில் இருந்து விடுதி 5 கிலோ மீட்டா் தூரத்துக்கு அதிகமாக இருப்பது அவசியம். இந்த விதியானது பெற்றோரை இழந்த மாணவா்களுக்குப் பொருந்தாது.

    பள்ளி விடுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கு வரும் 25-ந் தேதி வரையிலும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விடுதி காப்பாளா்களை அணுகி விவரம் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×