search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த மாணவி கொடூர கொலை- மாணவர் கைது
    X

    கைதான சாமிதுரை

    ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த மாணவி கொடூர கொலை- மாணவர் கைது

    • மாணவர் மண் எண்ணையை மாணவி மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். தீப்பற்றாததால் அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து மாணவியின் முகத்தில் போட்டு கொடூரமாக கொலை செய்தார்.
    • தன்னை காதலிக்க மறுத்ததால் ரோஜாவை கொலை செய்ததாக சாமிதுரை கூறி உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), விவசாயி. இவரது மகள் ரோஜா (வயது 19).

    ரோஜா நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஆத்தூர் தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் நீலகிருஷ்ணன். இவரது மகன் சாமிதுரை (22), இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    கூடமலையில் உள்ள உறவினர் சின்னதுரை என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சாமிதுரை சென்று வந்தார். அப்போது ரோஜாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஜாவிடம் காதலை தெரிவித்தார். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை.

    இதனால் சாமிதுரை ஆத்திரம் அடைந்தார். தொடர்ந்து தனது கூட்டாளிகள் 2 பேருடன் கடந்த 6-ந் தேதி ரோஜா வீட்டிற்கு சென்றார். பின்னர் ரோஜாவிடம் தன்னை காதலிக்குமாறு சாமிதுரை வற்புறுத்தினார்.

    அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சாமிதுரை மண் எண்ணையை ரோஜா மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். தீப்பற்றாததால் அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ரோஜாவின் முகத்தில் போட்டு கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற கெங்கவல்லி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படை அமைத்து சாமிதுரையை தேடி வந்தனர். மேலும் ரோஜாவின் உறவினர்களும், போலீசாருடன் இணைந்து கடந்த 3 நாட்களாக கூடமலை பகுதியில் முகாமிட்டு அவரை தேடினர்.

    இந்த நிலையில் கூடமலை மின் நிலையம் அருகில் சோலை மலையில் சாமிதுரை பதுங்கி இருப்பதாக அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், போலீசார், ரோஜாவின் உறவினர்கள் இன்று காலை அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது சோலைமலையில் இருந்து சாமிதுரை கீழே இறங்கி அங்குள்ள அழகுவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள சோளக்காட்டிற்குள் பதுங்கி இருந்தார். அவரை போலீசாரும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அப்போது ரோஜாவின் உறவினர்கள் சிலர் அவரை தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் சாமிதுரையை கைது செய்து பத்திரமாக அழைத்து சென்றனர். தொடர்ந்து சாமிதுரையை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்போது தன்னை காதலிக்க மறுத்ததால் ரோஜாவை கொலை செய்ததாக சாமிதுரை கூறி உள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×