எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: நெல்லை மாவட்டத்தில் 94.19 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

10 ஆயிரத்து 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 91.28 சதவீதம் ஆகும். மாநில அளவில் தென்காசி மாவட்டம் 10-ம் இடத்தை பெற்றுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதனை தங்களது செல்போனில் பார்க்கும் மாணவிகள். ( இடம்: பாளை முருகன் குறிச்சி)
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதனை தங்களது செல்போனில் பார்க்கும் மாணவிகள். ( இடம்: பாளை முருகன் குறிச்சி)
Published on

நெல்லை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியானது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 126 மாணவர்களும், 11 ஆயிரத்து 274 மாணவிகளும் என 22 ஆயிரத்து 400 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 10 ஆயிரத்து 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 91.28 சதவீதம் ஆகும். மாணவிகள் 10 ஆயிரத்து 942 பேர் தேர்வாகி 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 98 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.19 சதவீதமாகும்.

தமிழக அளவில் நெல்லை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 9-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 29-வது இடத்தில் இருந்தது. தற்போது 9-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 303 மாணவர்கள், 9 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 8 ஆயிரத்து 521 மாணவர்களும், 9 ஆயிரத்து 41 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.12 சதவீதமாகும். மாநில அளவில் தென்காசி மாவட்டம் 10-ம் இடத்தை பெற்றுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 752 மாணவர்கள், 11 ஆயிரத்து 249 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 1 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 10 ஆயிரத்து 33 மாணவர்களும், 10 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 29 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 95.58 சதவீதமாகும். தூத்துக்குடி மாவட்டம் தமிழக அளவில் 5-வது இடத்தை பிடித்தது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com