

வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு வாட்டாக்குடி நடுத்தெடுவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவரது மகன் முருகானந்தம் (வயது 37). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா என்பவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாட்டாக்குடியில் தாயார் பானுமதியுடன் (65) மகன் முருகானந்தம் வசித்து வந்தார், நேற்று முன்தினம் தாயருடன் வீட்டில் மகன் முருகா னந்தம் மது போதை யில் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது மனைவி பிரிந்ததை பற்றி இருவரும் பேசியதில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் தாய் பானுமதி கட்டையால் அடித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே பானுமதி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் இன்ஸ்பெக்டர்
ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தாயைகட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.