மாவட்டத்தில் இதுவரை 71, 412 எக்டர் குறுவை அறுவடை பணிகள் நிறைவு

அறிக்கை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை 71, 412 எக்டர் குறுவை அறுவடை பணிகள் நிறைவு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 78486 எக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 71412 எக்டர் பரப்பளவில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன.

மேட்டூர் அணையில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய வட்டாரங்களில் 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த 55.71 எக்டர் குறுவை பரப்பிற்கான கணக்கெடுப்பு பணி வேளாண்மை மற்றும் வருவாய் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் தற்போது வரை 55161 எக்டர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 873 விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது என்று வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com