யோகா போட்டிகள்

யோகா போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
யோகா போட்டிகள்
Published on

சிவகங்கை

சிவகங்கை தனியார் மண்டபத்தில் சிவகங்கை மாவட்ட சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் யோகா மற்றும் நேரு யுவ கேந்திரா சார்பில், தென் இந்திய அளவிலான யோகா போட்டிகள் நடந்தது. மாணவர்களுக்கு யோகா பயிற்சியின் முக்கி யத்துவத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும் இந்த யோகா போட்டி நடத்தப் பட்டது.

இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் கலந்துகொண்டு பார்வை யாளர்கள் முன் பல்வேறு வியக்கத்தகு யோகா சனங்களை செய்து அசத்தினர்.

கராத்தே சங்க தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு சிறப்பாக யோகாசனம் செய்த வர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நேருகேந்திரா பிரவீன் குமார், கேப்டன் சரவணன், ரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com