search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் பாசறை மகளிர் அணி ஆய்வுக் கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • சிவகங்கை அருகே அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் பாசறை மகளிரணி கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஊராட்சி தலைவர் கோமதி மணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் பூத் கமிட்டி பட்டியலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய, வாக்குறுதிகளை நிறை வேற்றாத தி.மு.க. அரசு குறித்து பொதுமக்களிடம் பூத் கமிட்டி பொறுப்பா ளர்கள், நிர்வாகிகள் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணி பாஸ்கரன், பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், கலைப்பிரிவு செயலாளர் செந்தில்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல துணை செயலாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். அணி துணை செயலாளர் துளாவூர் பார்த்திபன், தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சங்கர் ராமநாதன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×