search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்வி கடனுதவி
    X

    மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்வி கடனுதவி

    • மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்வி கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • புதிதாக விண்ணப்பித்துள்ள 71 மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவு கள் 2 வாரங்களில் கிடைக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    மாணவர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, கலெக்டர் ஆஷா அஜித், கார்த்தி சிதம்பரம் எம்.பி., வழங்கினர்.

    பி்ன்னர் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு 2 சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த 5-ந்தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் 39 மாணவர்களுக்கு ரூ.2.57 கோடி மதிப்பில்கடன் ஆணைகள் வழங்கப்பட்டது.37 மாணவர்களுக்கு ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப் பம் பெறப்பட்டது.

    காரைக்குடி சிறப்பு முகாமில் 65 மா ணவர்களுக்கு ரூ.6.59 கோடி மதிப்பில் கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34 மாணவர்கள் ரூ.் 1.73 கோடி மதிப்பில் புதிய கல்வி கடனுதவி பெற, விண்ணப்பித்துள் ளனர்.

    மொத்தமாக 104 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்துள்ள 71 மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவு கள் 2 வாரங்களில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×