தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
.
.
Published on

சேலம்: 

 சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது. 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 

எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்சாலை நடத்துபவர்களும், முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான தொழில் பழகுனர்களை தேர்ந்தெடுக்கலாம். 

மேலும் தொழில் பிரிவு வாரியாக தேவைப்படும் நபர்களின் பட்டியல் குறித்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்துக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com