search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
    X

    அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

    • மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
    • இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.

    தனியார் நிறுவனம்

    இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் சென்னையை தலைமையி டமாக கொண்டு இயங்கும் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் நிலக்கரி கையா ளும் பிரிவு, முதன்மை அரவை மற்றும் 2-ம் நிலை அரவை, கொதிகலன் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு ஒப்பந்தங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    முறைகேடு புகார்

    இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரி யத்திற்கு சப்ளை செய்த பொருட்களில் இந்நிறு வனம் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்துள்ள தாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்த மான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை யில் ஈடுபட்டனர்.

    சோதனை

    இதன் அடிப்படையில் மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா? வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மேட்டூர் அனல்மின் நிலை யத்தில் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனத்தில் நேற்று காலை 7 மணிக்கு வருமானவரித் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    13 மணி நேரம்

    இதில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கணினி யில் பதிவாகி இருந்த தகவல்களை சோதனை செய்தனர். மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்களி டமும் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி னர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.

    வருமான வரித்துறையி னரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதி காரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. ஆனால் கைப் பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவல்களை யும் அதிகாரிகள் தெரிவிக்க வில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×