search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறும் இடத்தில் அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு
    X

    விழா பந்தல் அமைய உள்ள இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்த காட்சி. அருகில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆர். ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , டி.எம்.செல்வகணபதி உள்பட பலர் உள்ளனர்.

    தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறும் இடத்தில் அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு

    • சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17 -ந் தேதி தி.மு.க.வின் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது.
    • தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறும் இடத்தில் அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17 -ந் தேதி தி.மு.க.வின் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரமாண்ட பந்தல்

    இதற்காக அந்த பகுதியில் பிரமாண்டமான விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்த பணியினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

    அப்போது கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., , மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, நெசவாளர் அணி ஆறுமுகம், முரா.கருணாநிதி, அ.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி , சிவராமன் தங்கமுத்து (எ) மருதமுத்து , பேரூர் செயலாளர்கள் பாபு ( எ) வெங்கடேஷ்வரன், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×