search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்- வாலிபர் கைது
    X

    சங்கரன்கோவில் அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்- வாலிபர் கைது

    • முத்துராஜ் சொந்தமாக மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.
    • ரூ.80 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரன்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 31). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.

    அந்த மாடுகளை பராமரிப்பு செய்வதற்காக வீட்டின் அருகிலேயே தொழுவம் ஒன்று வைத்துள்ளார். அந்த தொழுவத்தில் புகையிலை பொருட்களை அதிக அளவில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு கதவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தொழுவத்தில் சோதனை செய்தனர். அப்போது மூட்டைகளில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 218 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×